இராகு கேது பெயர்ச்சி பலன்கள்

  

- 2025

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மேஷம் ராசி நேயர்களே 

இது வரை உங்கள் ராசிக்குள் ராகு பகவானும், ஏழாம் இடத்தில் கேது பகவானும் சஞ்சரித்து பலவகை தொந்தரவுகளை கொடுத்து இருப்பார்கள். ஒன்றை ஆண்டுகளாக மேஷ ராசிக்கு போதாத காலமாகவே இருந்து வந்தது, இனி 08.10.2023 அன்று வரப்போகும் ராகு - கேது பயற்சி பல வகையில் மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரப்போகிறது. இந்த பெயர்ச்சியில் ராகு பகவான் விரைய ஸ்தானத்திற்கும் - கேது பகவான் ரண ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் கூடுதலான அலைச்சல் உண்டாகும் என்றாலும் நல்ல தனலாபம் உண்டு. மனதில் தெளிவு பிறக்கும். அடுத்தவரின் தேவைகளை நிறைவேற்றி வைக்க முடியும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பணத்தினை நியாமான வழியில் சேமிப்பது அவசியம். எந்த ஒரு யோசனையும் இல்லாமல் செய்யும் முதலீடுகளால் சில பண நஷ்டத்தினை சந்திக்க நேரிடும். நம்பிக்கையான இடங்களில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். எப்போதும் பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும்.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிடையே புரிதல் அதிகரிக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். பண வரவுகள் காரணமாக குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். சொந்த வீடு, வாகனம் யோகம் உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். கொடுக்கல், வாங்கல் லாபமளிக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். புத்திரர் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. நண்பர்களுக்காக உதவி செய்யும் சூழல் உருவாகும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ராகுவின் இடமாற்றம் உங்கள் வேகத்தினைக் குறைக்கும். உங்களது நடவடிக்கையை பார்த்து மற்றவர்கள் வியந்து போவர். எதிலும் பொறுமையாக இருந்தால் மட்டுமே பல முக்கிய பொறுப்புகளை ஏற்று செயல்பட இயலும்.
வழக்கு விவகாரங்களில் சமாதானமாகப் போவது நல்லது. வேகத்தினைவிட விவேகமே சிறந்தது என்பதனை நன்கு உணர்ந்து செயல்படுவது நல்லது. நீங்கள் எல்லா இடத்திலும் விட்டுக்கொடுத்துச் செல்வதால் உங்கள் கௌரவம் உயரும். எதிலும் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நற்பலனை அனுபவிக்க முடியும். 6ம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் எதிரிகளை வெல்வார். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். மேலும் தான் அமரும் இடத்தின் வலிமையைக் குறைப்பவர் கேது என்பதால் கடன் பிரச்னைகள் குறையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடி வரும்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் வேலை பளு இருக்கும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு சுயமாகத் தொழில் செய்யும் நிலை உருவாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். வித்தியாசமான அணுகுமுறையால் போட்டில் ஜெயிக்க முடியும். கூட்டு தொழில், வியாபாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்கவும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு.

நாள்பட்ட உடல் உபாதைகள் நீங்கும். தேக பலம் நலம் பெரும். யாரையும் சார்ந்திருக்காமல் தனித்து செயல்பட்டு வெற்றி காண முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை உண்டாகும். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை இருக்கப் பிறந்தவர்களுக்கு கேதுவின் அனுக்கிரகத்தால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் ராகு பகவான் சற்று அலைச்சலைத் தந்தாலும் கேது அதற்குண்டான நற்பலன்களைத் தந்து உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவார்.

 

மேஷம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்

புதுமையாக சிந்திக்கும் மனமும், பூப்போல புன்னகை பூக்கும் முகபாவங்களும், எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிடும் அபார சக்தியும், ஊரே ஒரு குடையின் கீழ் எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் போராடி வெற்றிபெறும் வேங்கைகளே! தன்மானம் உடைய நீங்கள், யாரையும் சார்ந்து வாழ மாட்டீர்கள்.

ராகுவின் பலன்கள்: 

இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து கொண்டு உடல் நலக்குறைவுகளையும், குடும்பத்தில் பிரச்சினைகளையும் தந்து கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். ராகுவால் உங்களுக்கு விபரீதமான ராஜ யோகங்கள் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். தம்பதிக்குள் நடந்துவந்த நிழல் யுத்தம் நீங்கி நல்லுறவு தொடரும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் தீரும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் சஞ்சாரம் செய்வதால் இக்காலகட்டங்களில் திடீர் பயணங்கள், வீண் பயம், அலைச்சல், வாகன செலவுகள் வந்துபோகும். சொத்து பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் மனக்குழப்பம், காரியத் தடங்கல் வரக் கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகுபகவான் செல்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்கள், வந்தாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. கலைஞர்கள், நல்ல வாய்ப்புகள் கிடைத்து, புகழடைவர். வசதி பெருகும்.

கேதுவின் பலன்கள்: 

இதுவரை உங்கள் ராசியில் 7ஆம் இடத்தில் கேது இருந்துகொண்டு எந்த வேலையையும் முடிக்க முடியாத சூழலை தந்தார். கேது இனி ஆறாம் வீட்டுக்கு வருகிறார். அடுக்கடுக்காய் விபரீத ராஜ யோகங்களை உருவாக்குவார். விநாயகர் வழிபாட்டில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். வேதங்கள் படித்து அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கி, தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் கவுரவப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. கூடா பழக்க வழக்கங்களை தவிர்த்துவிடவும்.

சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், படபடப்பு, வீண் டென்ஷன், தாழ்வு மனப்பான்மை, சோர்வு, சலிப்பு வந்து நீங்கும். சொத்து பிரச்சினையை நிதானமாக கையாளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கும். கர்ப்ப சிதைவு, உடல் கோளாறு போன்ற பிரச்சினைகள் இனி இருக்காது. தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். வேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் தொல்லைகள் நீங்கி உங்களுக்கு நன்மைகள் விளையும். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறிடத்துக்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும்.

உத்தியோகத்தில் உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. இந்த ராகு - கேது மாற்றம் ஒடுங்கி, ஒதுங்கியிருந்த உங்களை முன்னுக்கு கொண்டு வருவதுடன், திடீர் யோகம், வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும்.

பரிகாரம்: 

வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் ஆம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும்  அபயவல்லி சமேத ஸ்ரீநாகரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.