குரு பெயர்ச்சி பலன்கள்

  

- 2025

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

லட்சிய கனவுகளுடன் வாழும் மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான மீனராசியில் அமர்ந்து செலவுகளையும், தேவையற்ற மனஸ்தாபங்களையும் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது உங்கள் ராசியிலேயே ஜன்ம குருவாக அமர இருக்கிறார். 22.4.2023 முதல் 1.5.2024 வரை மேஷ ராசியிலேயே சஞ்சாரம் செய்ய இருக்கும் குருபகவான் இனி எப்படிப்பட்ட பலன்களைத் தர இருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்குப் பிரபல யோகாதிபதி. எனவே ராசியில் குரு சஞ்சரிக்கும் காலகட்டத்தில் நற்பலன்களும் ஏற்படும். அவரே ராசிக்கு விரையஸ்தானாதிபதியாகவும் அமைவதால் நற்பலன்களும் விரைய செலவுகளையும் கலந்தே தருவார்.

ஜன்மகுரு காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சின்னச் சின்ன உபாதைகளையும் அலட்சியம் செய்யாமல் மருத்துவம் நாட வேண்டிய நேர இது. யோகா, தியானம் மற்றும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். எடுத்த காரியங்களை முடிப்பதில் அலட்சியமும், சோர்வுவும் காட்டக்கூடாது. குலதெய்வ வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

என்றாலும் ராசிக்கு 5,7,9 ம் வீடுகளை குருபார்ப்பதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பழைய வாகனத்தை மாற்றிப் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. வெகுநாட்களாக வராமலிருந்த பணம் தக்கசமயத்தில் வந்து கை கொடுக்கும். தந்தையின் உடல்நிலை சரியாகும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 06.02.2024 வரை

இந்தக் காலகட்டங்களில் குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். பொருளாதார விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்துச் செயல்படுங்கள். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தினரோடு கூடுதல் அன்பும் பற்றும் வையுங்கள்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

குருபகவானின் சஞ்சாரம் பரணி நட்சத்திரத்தில் இணைவதால் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. மனதளவில் நேர்மறையான விஷயங்களையே நினைக்க வேண்டும். அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதால் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை

குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்வதால் அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு அசதி, சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம் - 11.9.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் சஞ்சாரம் செய்வதால் அனைத்திலும் வெற்றிகிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்வீர்கள். வெற்றிகள் குவியும். இழுபறியாக இருந்த சொத்துகள் கைக்கு வரும். வீட்டில் வசதிகள் பெருகும்.

வியாபாரிகள் : சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வது நல்லது. அறிமுகமில்லாத அல்லது அனுபவம் இல்லாத நபர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், உணவுக்கூடம், கெமிக்கல், ஏற்றுமதி&இறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். பிரச்னைகள் அதிகரித்தாலும் பெரியளவில் பாதிப்புகள் இருக்காது.

உத்தியோகஸ்தர்கள் : மனப்போராட்டங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மேலதிகாரியின் ஒத்தாசையால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும். மேலதிகாரிகள் மதிப்பார்கள். சவால்களை, பிரச்சனைகளை சமாளிக்க புது தெம்பு பிறக்கும். புது வாய்ப்புகள் வரும்போது அவசரப்படாதீர்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். என்றாலும் அதனால் பணிச்சுமையும் அதிகரிக்கும். பதவியுயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். ஜூன், பிப்ரவரி மாதங்களில் சம்பளத்துடன், சலுகைகளும் கூடும்.

ஆகமொத்தம் இந்த குருப் பெயர்ச்சி வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுத்து முன்னேறும் வழியைக் கொடுக்கும்.

மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

காலபுருஷ தத்துவத்தில் முதல் ராசி மேஷம். இதில் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் அடக்கம். செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷராசிக்காரர்கள் அனைத்திலும் முன்னணியில் இருக்க முயல்பவர்கள். அப்படிப்பட்டவர்களைக் கடந்த ஓர் ஆண்டாக ராசிக்குள் அமர்ந்த குருபகவான் முடிக்கினார். இதனால் பணவரவில் தாமதம், வேலை பதவிகள் கிடைப்பதில் தடை, ஆரோக்கியத்தில் தொடர்ந்து பிரச்னை என்று ஏதேனும் ஒன்று இருந்துகொண்டே இருந்தது. இந்த ஆண்டு மே - 1 - ம் தேதி முதல் குருபகவாம் மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்குள் அடியெடுத்துவைக்க இருக்கிறார். இனி அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். தடைப்பட்ட பதவி, வேலை, அரசுவழியில் அனுகூலம் ஆகியன கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் களைகட்டும். திருமணம் எதிர்பார்த்துக்காத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும். குழந்தை பாக்கியத்துக்காக இதுவரை பரிகாரங்கள், வைத்தியங்கள் என்று செய்துபார்த்து ஏமாந்தி போயிருந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு அழகான குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

இதுவரை அடுத்தவர்கள் புண்படும்படிப் பேசி பலரின் நட்புகளை இழந்தீர்களே... இனி பேச்சில் இனிமை கூடும். சாமர்த்தியமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் பலவழிகளிலும் வரும். வீடு மனை வாங்கும் ஆவல் பிறக்கும்.

குரு பார்வை பலன்கள்

குருபகவானின் பார்வை 6,8,10 ஆகிய வீடுகளில் விழுகிறது. 6 -ம் வீடான கன்னியை குருபார்ப்பதால் இனி கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வீடு வாங்கப் புதிய கடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். பிரச்னைகொடுத்த சத்ரு இனி ஓடி ஒளிவார். மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும்.

குருபகவான் 8 -ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.

குருபகவானின் பார்வை 10 - ம் வீட்டில் விழுவதால் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு ஆகியன தேடிவரும். தொல்லைதந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் மாறிப்போவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.5.24 முதல் 12.6.24 வரை உங்கள் பூர்வபுண்ணியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளை அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புது வழி பிறக்கும். நட்பு வட்டாரம் விரியும்.

12.6.24 முதல் 19.8.24 வரை மற்றும் 2.12.24 முதல் 5.4.25 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டிற்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த மூட்டுவலி, நெஞ்சு வலி குறையும். அவருடன் இருந்த மனக்கசப்புகளும் நீங்கும். கலை, இசையில் நாட்டம் பிறக்கும். வீடு கட்ட தாமதமான ப்ளான் அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான  தூக்கம் வரும்.

19.8.24 முதல் 2.12.24 வரை மற்றும் 5.4.25 முதல் 14.5.25 வரை உங்கள் ராசிநாதானான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகாவன் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். வெளிமாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்து கொண்டேயிருக்கும்.

வியாபாரம் : 

உங்கள் ரசனைக்கேற்றபடி கடையை அலங்கரிப்பீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகம் :

 எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனிப் பணிந்து போவார். சகஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும்.  சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர்கள் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.
 
இந்த குரு மாற்றம் பிரச்னைகளின் பிடியிலிருந்து விடுபட வைப்பதுடன் வாடியிருந்த உங்கள் வாழ்வில் வசந்தத்தை வாரி வழங்குவதாக அமையும்.